திருவள்ளூர்: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளும் வரும் 14ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. பொதுவாக டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும். அதன்பின் டாஸ்மாக் கடைகள் அருகே மற்றும் பார்களில் இரவு 10 மணி முதல் அடுத்த நாள் பகல் 12 மணி வரை மதுப்பாட்டில்கள் தாராளமாக கிடைக்கும். தற்போது பார்களும் மூடப்பட்ட நிலையில், அதனருகே மறைவான இடத்தில் கோணிகளில் வைத்து, ஒரு குவார்ட்டர் ரூ.50 முதல் 80 வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.