சேலம்: கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சேலத்தில் 25 ஆயிரம் வீடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து சேலம் மாவட்டம் வந்த சிலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதனால் சேலம் கிச்சிபாளையம், சன்னியாசிகுண்டு வட்டாரத்துக்குள் யாரும் நுழையாதபடி அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன.