சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் டிஜிபி, தலைமைச் செயலர், ஊரடங்கை கண்காணிக்க, அத்தியாவசிய பொருள் கிடைக்க அமைக்கப்பட்ட 9 குழுக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சமூக இடைவெளியுடன் அமைச்சர்கள், அதிகாரிகள், கலந்து கொண்டனர். சுவாசக் கோளாறால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் குறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.