சுத்தியலால் அடித்து மனைவி படுகொலை: கணவன் கைது

தண்டையார்பேட்டை: சுத்தியலால் அடித்து மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.  பழைய வண்ணாரப்பேட்டை தட்டான்குளம் தெருவை சேர்ந்தவர் ரவி (42), கூலித்தொழிலாளி. இவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.  இவரது மனைவி சாவித்திரி (38). நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலையில்  எழுந்த ரவி அங்கும் இங்குமாக சுற்றிதிரிந்துள்ளார். இதை பார்த்து ரவியின் தாய் சந்தேகமடைந்து சாவித்திரி எங்கே என்று கேட்டுள்ளார். ஆனால், ரவி சரியான பதில் கூறவில்லை. இதனால் சந்தேகமடைந்த ரவியின் தாய் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, தலையில் அடிபட்டு சாவித்திரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து கொருக்குப்பேட்டை  காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாவித்திரியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ரவியை காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட போலீசார் விசாரணையில், குடும்ப தகராறில் ரவி ஆத்திரமடைந்து மனைவி தூங்கும்போது சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. ரவிக்கு மனநலம் பாதித்திருந்ததால் இந்த அசம்பாவித சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: