சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் தங்கள் பயிரிடுகிற நெல்லை அறுவடை செய்ய முடியாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் கருகி கிடப்பதால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. தீவனங்கள், முட்டைகள், கறிக்கோழிகள் எடுத்துச்செல்லும் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.