கொரோனா விழிப்புணர்வு கண்காணிப்புக்குழு அமைப்பு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் இயங்கும் சில இயக்கங்களின், கட்சியினர் கூட்டாகக் கலந்தாலோசித்து “கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு’’என்கிற ஓர் அமைப்பைத் துவங்கியுள்ளனர்.   மத்திய, மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் இடையேயான ஒரு தொடர்புப் பாலமாக இந்த “கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு” இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவில் பழ.நெடுமாறன், திருமாவளவன் எம்பி, கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, வேல்முருகன், தெஹ்லான் பாகவி, திருமுருகன் காந்தி, கே.எம்.ஷரீப், இனிகோ இருதயராஜ், வன்னி அரசு, நெல்லை முபாரக், அப்துல் சமது, பெரியார் சரவணன், சுப.உதயகுமாரன் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories: