சென்னை: கொரோனா ஊரடங்கால் கட்டிட தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், பிளாட்பாரங்களில் வசிப்பவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இவர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை செய்ய அரசு முயற்சி எடுத்து வந்தாலும் அதை அமல்படுத்துவதில் பல பிரச்னைகள் உள்ளன. இவர்களின் தேவையை பூர்த்தி செய்ய போதிய ஊழியர்கள் இல்லை. அதனால், சமூக பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள தயாராக இருக்கும் தன்னார்வலர்கள், ‘’ஸ்டாப் கொரோனா’’ என்ற இணையதளத்தில் பதிவிடலாம் என்று அரசு அறிவித்தது.