சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் சுழற்சி முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உணவு வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமாக சென்னை, திருச்சி, சேலம், விழுப்புரம், கோவை உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள் உள்ளன. இதன்மூலமாக தினசரி 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் .தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. பஸ்கள் அனைத்தும் ஆங்காங்குள்ள பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.