கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துமகூரு மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் நேற்று இறந்தார். இதன் மூலம், இம்மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. நேற்று இறந்த முதியவர் தும்கூரு மாவட்டத்தில் உள்ள ஷிரா தாலுகாவை சேர்ந்தவர். அரபு நாடுகளுக்கு சென்றிருந்த இவர், கடந்த 5ம் தேதி சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் டெல்லி சென்றுள்ளார். அங்குள்ள ஜாமியா மசூதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், 11ம் தேதி துமகூரு திரும்பினார். 18ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 19ம் தேதி ஷிராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொண்டை வலி, சளி, தலைவலி, காய்ச்சல் அதிகரித்தை தொடர்ந்து 24ம் தேதி துமகூரு மாநகரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு வந்தார்.