சென்னை : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை 6 மணி மாலை 6 மணி வரையில் சென்னையில் 144 தடை உத்தரவை மீறி வெளியில் திரிந்த 279 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறிய 3 பேர் மீதும், வதந்தி பரப்பிய ஒருவர் என்று மொத்தம் 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 119 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.