தண்டையார்பேட்டை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு உள்ள காரணத்தால் வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களையும் சோதனை செய்து அதில் வரும் பயணிகளை சுகாதாரத்துறை கண்காணிப்பில் வைத்துள்ளது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி அமெரிக்காவில் இருந்து சௌகார்பேட்டை அன்னப்பிள்ளை தெருவை சேர்ந்த பொறியாளர் புபேந்திரன் (35) என்பவர் வந்துள்ளார் அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தாமல் மொட்டை மாடி பால்கனி வீட்டுக்கு வெளியே சுற்றித்திரிந்து உள்ளார்.