சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இந்தோனேஷியா, மலேசியா மற்றும் அசாம் மாநிலத்தில் இருந்து 16 இஸ்லாமியர்கள் டெல்லிக்கு வந்தனர். பின்னர், அங்கிருந்து காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள சுன்னத் ஜும்மா பள்ளிவாசலுக்கு வந்து தங்கியுள்ளனர். தற்போது வெளிநாடு ,வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் அந்தந்த கலெக்டர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் தங்களை பதிவு செய்து கொண்டு மருத்துவ உதவிகளை நாடலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் வந்துள்ள இஸ்லாமியர்கள், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பள்ளிவாசலில் தங்கியுள்ள இஸ்லாமியர்களின் பயண விவரங்களை கேட்டறிந்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தனர்.