ரயில்வே பணிமனைகள் மூட உத்தரவு: தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னை: கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து பெரம்பூரில் இயங்கி வரும் ரயில்வே பணிமனைகளை மூட தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கையாக சென்னை, பெரம்பூரில் இயங்கி வரும் ரயில் பெட்டி தயாரிக்கும் பணிமனைகள், கோல்டன் ராக் பணிமனைகள் என மூன்று ரயில் பணிமனைகளை 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை மூட தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், வரும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்படுகிறது.  ஊழியர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். கொரோனா பரவுவதை தடுப்பதற்காக  மத்திய அரசு மற்றும் ரயில்வேத்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.  மேலும், எதேனும் முக்கிய சமயத்தில் அழைப்பதற்காக தொலைபேசியை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். என்று தென்னக ரயில்வே அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: