சென்னை: 144 தடை உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறினால் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் நலன், பாதுகாப்பு, பொது அமைதியை நிலைநாட்டும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.