பெங்களூரு: துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட 195 பேரில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: துபாயில் தவித்து வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 195 பேரை பெங்களுரு அழைத்து வரப்பட்டனர். விமான நிலையத்தில் இவர்களை சோதனை செய்த போது 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவர்களை ராஜீவ்காந்தி நெஞ்சக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.