துபாய், கத்தாரில் இருந்து சென்னை வந்த 26 பேருக்கு காய்ச்சல், சளி: சிறப்பு முகாமில் கண்காணிப்பு

சென்னை: துபாய், கத்தாரில் இருந்து வந்த 26 பேருக்கு காய்ச்சல், சளி இருந்ததால் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். துபாய், கத்தார் ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை 2 விமானங்களில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 7 பெண்கள் உட்பட 26 பேருக்கு காய்ச்சல், சளி தொல்லை இருந்தது. இதனால் அவர்களை வெளியில் அனுப்பாமல், தனியறையில் வைத்து மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்பு தனி வாகனங்களில் ஏற்றி, தாம்பரம் சானடோரியம் சிறப்பு முகாமில் 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: