பால்முகவர்கள் சங்கம் அறிவிப்பு 22ம் தேதி பால் விநியோகம் நிறுத்தம்

சென்னை: தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:வரும் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளை மூட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பால் பொருட்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க சிரமம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினம்தோறும் விற்பனை செய்யப்படும் 1.5 கோடி லிட்டர் பாலை கொண்டு சேர்ப்பது என்பது இயலாத காரியம். எனவே, அன்றைய தினம் பால் முகவர்கள், தொழிலாளர்கள் பால் விற்பனையில் ஈடுபட போவதில்லை என முடிவு செய்துள்ளோம். அதே வேளையில் பால் முகவர்கள் மட்டும் 22ம் தேதி அதிகாலை 3 மணி முதல் காலை 6.30 மணி வரை பால் விநியோகம் செய்வார்கள்.

Related Stories: