டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற நாட்டில் குறைந்தபட்சம் 5 பெரிய மருத்துவமனைகளை தனித்து உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நாட்டில் தனித்த 4 அல்லது 5 பெரிய மருத்துவமனைகள் தேவைப்படும் என அரசு கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனை தொடர்ந்து, ஏற்கனவே இயங்கும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட, தனித்த வார்டுகளை அமைப்பதில் சிரமம் இருப்பதாக கூறும் மருத்துவமனை நிர்வாகங்கள், அது மற்ற நோயாளிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றன.