10, 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த போலீஸ் துறை வாரிசுகளுக்கு எஸ்பி பரிசு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட போலீஸ் துறையில் பணிபுரியும் வாரிசுகளின் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை படித்தவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பரிசு தொகை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் துறையில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களின் வாரிசுகளில் 2019ம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பரிசு தொகை வழங்கினார்.

இதில் பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்தவருக்கு 5 ஆயிரத்து 500 ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்தவருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்தவருக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயும் மேலும் ஆறுதல் பரிசாக 7 பேருக்கு தலா 2 ஆயிரம் வீதம் 14 ஆயிரமும் வழங்கப்பட்டது.

இதேபோல் 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்தவருக்கு 6 ஆயிரத்து 500 ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்தவருக்கு 5 ஆயிரத்து 500 ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்தவருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயும் மேலும் ஆறுதல் பரிசாக 7 பேருக்கு தலா 2 ஆயிரத்து 500 வீதம் 17 ஆயிரத்து 500 ரூபாய் என அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மொத்தம் 61 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது.

Related Stories: