தலைமை செயலகத்தில் உள்ள உணவகங்கள் திடீர் மூடல்

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக தலைமை செயலகத்தில் உள்ள உணவகங்கள் நேற்று திடீரென மூடப்பட்டன. தலைமை செயலகத்துக்கு வருபவர்கள் வசதிக்காக தலைமை செயலகத்துக்கு உள்ளேயே உணவு கூடங்கள், தேநீர் கடைகள் இயங்கி வந்தன. இந்த நிலையில் நேற்று ராணுவத்தின் இடத்தில் இயங்கி வந்த பாரத், வெல்கம், ஜெய் ஹிந்த், சாப்பிட வாங்க மற்றும் தேநீர் கடைகள் மூடப்பட்டன. தமிழக அரசின் பொதுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தர்பார், மாயாண்டி விலாஸ், கூட்டுறவு உணவகம், கூட்டுறவு சார்பில் இயங்கும் தேநீர் கடைகள் மட்டுமே இயங்கியது. மூடப்பட்ட கடைகள் முன்பு வைக்கப்பட்டுள்ள போர்டில், “கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18ம் தேதி முதல் 22ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை கடை விடுமுறை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Related Stories: