டெல்லி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிலிப்பைன்சில் மருத்துவக் கல்வி பயின்று வரும் தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் 200 பேர், கொரோனா வரைஸ் அச்சுறுத்தல் காரணமாக விமானத்தில் நாடு திரும்பினர். அவர்கள் பயணித்த விமானம் கோலாலம்பூரில் தரையிறங்கிய நிலையில், மலேசியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதனால், கோலாலம்பூரில் இருந்து இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.