மேட்டூர்: கொளத்தூரில் கலப்பு திருமணம் செய்ததால், உறவினர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளமதி தான் பெற்றோருடன் செல்லவே விரும்புவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது..ஈரோடு மாவட்டம், குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகள் இளமதி(23), பவானியில் உள்ள கேஸ் ஏஜென்சியில் பணிபுரிந்து வந்தார். இவரும், பவானி கவுந்தப்பாடியை சேர்ந்த நூற்பாலை தொழிலாளி செல்வனும் காதலித்து வந்தனர். கடந்த 9ம் தேதி இரவு இளமதியும், செல்வமும், மேட்டூர் அருகே கொளத்தூர் வந்து, தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஈஸ்வரனிடம் தஞ்சமடைந்தனர். இருவருக்கும் அவர் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தார். தகவல் அறிந்த பெண்ணின் தந்தை ஜெகநாதன் மற்றும் உறவினர்கள், ஈஸ்வரனை தாக்கி இளமதியை மீட்டு சென்றனர். அவர்கள் கடத்தி சென்ற ஈஸ்வரன், செல்வம் ஆகியோரை ேபாலீசார் மீட்டனர். அவரக்ள் கொடுத்த புகாரின் பேரில், 50 பேர் மீது கொளத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து, இளமதியின் தந்தை ஜெகநாதன் உட்பட 18 பேரை கைது செய்தனர். இதனிடையே, செல்வம் தனது காதல் மனைவியை மீட்டு தரவேண்டும் என புகார் கூறியிருந்தார்.