ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்த மத்திய அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது.அதன் பிறகு, முதல் கட்டமாக பரூக் அப்துல்லாவை கடந்த செப்டம்பர் 15ம் தேதி பொது பாதுகாப்பு சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் அரசு கைது செய்தது. பின்னர், இது டிசம்பர் 13, மார்ச் 11 என இருமுறை நீட்டிக்கப்பட்டது.