தமிழகம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு Mar 13, 2020 திண்டிவனம் அரசு மருத்துவமனை திண்டிவனம்: திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு பிரிவை கலெக்டர் அண்ணாதுரை நேற்று பார்வையிட்டார். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாத ஊழியர்களை கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேற்று காலை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு பிரிவு தனி வார்டையும் கலெக்டர் பார்வையிட்டார். அப்போது புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கண் நோய் சிகிச்சை பிரிவு, சி.டி. ஸ்கேன் பிரிவு போன்ற பல்வேறு வார்டுகளுக்கு சென்று பார்வையிட்டார். நோயாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார். ஒரு சில வார்டுகளில் மின்விளக்குகள் இல்லாததையும், போதிய நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாததையும் கண்ட கலெக்டர், அங்கிருந்த ஊழியர்களை கண்டித்தார். பின்னர் ஆய்வை முடித்துக்கொண்டு புறப்பட்டு சென்றார். கலெக்டர் ஆய்வின் போது திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, அரசு மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி, துணை இயக்குனர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் பிரகாஷ், வட்டாட்சியர் ராஜேசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1000 இடங்களில் ORS பாக்கெட்களை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு
மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த மூவருக்கு முன் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
வேலூர் தொரப்பாடியில் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகம், சுற்றுப்புற பகுதிகளில் டிரோன் பறக்க தடை!
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் ORS பாக்கெட்டுகள் வழங்கும் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்களை அமைக்க உத்தரவு!
தினகரன்-சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் சார்பில் அரங்குகள் அமைப்பு
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இன்றைய திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்