சென்னை: திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து ஏப்ரல் 9ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவொற்றியூரை சேர்ந்த எஸ்.கிருபாகரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலின் ராஜகோபுரம் ரூ37.50 லட்சம் செலவில் கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. நீண்ட காலமாக பராமரிக்கப்படாததால் ராஜகோபுரத்தின் வர்ணங்கள் மறைந்தும், கோபுரத்தில் விரிசலும் விழுந்து சேதமடைய வாய்ப்பு உள்ளது.
திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து ஏப்ரல் 9க்குள் தெரிவிக்க வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
- கோவில்
- திருவொட்டியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில்
- திருவொற்றியூர்
- தொண்டு துறை
- உயர் நீதிமன்றம்
- வரதராஜ பெருமாள் கோயில்