சென்னை: தமிழகத்தில் சிறந்த மருத்துவர்கள் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்த அவர், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு உடனே சோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது, என கூறியுள்ளார்.