கோவை: கோவை ஆனைகட்டி அருகே மலைப்பகுதி வீட்டில் தங்கியிருந்த பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை போலீசார் கைது செய்தனர். தமிழக எல்லையையொட்டி கேரளாவில் அட்டப்பாடி அருகே மஞ்சக்கண்டி வனத்தில் தண்டர்போல்டு (கேரள நக்சல் தடுப்பு) போலீசார் கடந்த அக்டோபர் மாதம் சோதனை நடத்தினர். அப்போது வனத்தில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கும்பலில் இருந்த கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பெகாருவை சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.