ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் அனல் மின் நிலைய பணிக்கு சவடு மண் எடுத்து சென்ற வாகனங்களை, மீனவ மக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு நிலம் கையகப்படுத்த துவங்கியது முதல் விவசாயிகளும், மீனவர்களும் பல்வேறு வகையில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அனல் மின் நிலையத்திற்கு கடலில் இருந்து நீரை எடுத்து பயன்படுத்தி விட்டு, மீண்டும் கடலுக்குள் விடுவதற்கு 6 கி.மீ தூரத்திற்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.