மானிய கோரிக்கை விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு சபாநாயகர் தலைமையில் தொடங்கியது

சென்னை: மானிய கோரிக்கை விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையில் இன்று வனத்துறை, சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது. வனத்துறை மீது நடைபெறும் விவாதத்துக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்து பேசுவார். சுற்றுச்சூழல் துறை மீது நடைபெறும் விவாதத்துக்கு அமைச்சர் கருப்பணன் பதில் அளித்து பேசுவார். தொடர்ந்து இரண்டு துறைகளுக்கும் 2020-21ம் ஆண்டுக்கான நிதி வழங்குவதற்கு பேரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும்.

Related Stories: