ஆவடி: பட்டாபிராம், வள்ளலார் நகர், முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மகேஷ் குமார் (21), பிரபல ரவுடி. இவர் கடந்த ஜனவரி 28ம் தேதி அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் ஈஸ்வரன் முன்பு ஆஜராகி, ஒரு ஆண்டுக்கு எந்த குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன் என நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.ஆனால் அதை மீறி, கடந்த மாதம் 2ம் தேதி ஆவடி அடுத்த அன்னம்பேடு, பெருமாள் கோயில் தெருவைச் சார்ந்த கவுதம் (20) என்பரை கல்லால் சரமாரி அடித்து கொல்ல முயன்றுள்ளார்.