சென்னை: தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை பொங்கல் பரிசு திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று உத்தரவிட்டது.