சென்னை: சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகத்தில் நடைபெற்ற மாதிரி நீதிமன்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் பரிசு வழங்கினார்.தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தில், பல்வேறு சட்டக்கல்லூரிகள் மாணவர்களுக்கான மாதிரி நீதிமன்றம் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி ‘வரி’யை தலைப்பாக கொண்டு நடத்தப்பட்டது. மாதிரி நீதிமன்ற போட்டி முதலில் இணையதளத்தின் வழியே நடைபெற்றது. இதில் வெற்றியடைந்தவர்களுக்கான இறுதி போட்டி, நேற்று சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலை கழகத்தில் நடைபெற்றது.
மாதிரி நீதிமன்றம் போட்டி: சட்ட கல்லூரி மாணவர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பரிசு
- நீதிபதி
- மாதிரி நீதிமன்ற போட்டி: உச்ச நீதிமன்றம்
- சட்ட கல்லூரி மாணவர்கள்
- மாதிரி நீதிமன்றப் போட்டி: உச்ச நீதிமன்றத்திற்கான சட்டக் கல்லூரி மாணவர்கள்