சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் லிப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அடுக்குமாடி கட்டிடத்தில் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நிலையில், ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த சபீதா (42) என்பவர் நேற்று காய்ச்சலுக்கு சிகிச்சை பெற, தனது மகள் மற்றும் 8 மாத கைக்குழந்தையுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.