தஞ்சை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தேவன் தலைமை வகித்தார். கூட்டத்தில், காவல்துறை மற்றும் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசாணை எண்.15/2010ன்படி பணியில் சேர்ந்த நாள் முதல் 25 ஆண்டுகள் முடிந்த தேதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வை ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கும் வழங்கி தனி ஆணை பிறப்பிக்க வேண்டும். நீதிமன்றத்தில் காவலர்கள் தொடுத்த வழக்கை ஏற்று அரசு மேல்முறையீடு செய்யும் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். காவல்துறையினருக்கு தனி ஊதியக்குழு அமைக்க வேண்டும்.