வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த மேடவாக்கம் ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்தவர் நீதிராஜன் (46). இவரது மனைவி பாரதி (37). நேற்று அதிகாலை நீதிராஜன் தனது மனைவி பாரதியை பைக்கில் ஏற்றிக்கொண்டு திருவான்மியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தரமணி 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி திடீரென இவர்களது பைக் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நீதிராஜன் இறந்தார். பின்னர் அவரது மனைவியை மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாரதி இறந்தார்.