பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, பிரதான சாலையோரத்தில், எம்ஜிஆரின் உருவ சிலை அதிமுகவினரால் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த சிலையின் பின்புறம் உள்ள வணிக வளாகத்தின் உரிமையாளர் அந்தோணிசாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, பொதுமக்களுக்கும், தனது வணிக வளாகத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே அதனை அகற்ற வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள எம்ஜிஆர் சிலையை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.