திருச்சி: திருச்சி ஒத்தக்கடை பகுதியில் கடந்த 3ம் தேதி தனியார் வணிக வளாகத்தில் காவலாளியின் தலையில் மர்ம நபர் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்ய முயற்சிக்கும் சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் தற்போது வெளியாகியுள்ளன. திருச்சி மாநகராட்சி பகுதிக்குப்பட்ட ஒத்தக்கடை பகுதியில் தனியார் வணிக வளாகம் அமைந்துள்ளது. மேலும், இங்கு செல்போன், மின்னணு சாதனங்கள், காலணிகள் என பல்வேறு கடைகள் உள்ளன. இந்நிலையில், பொன்மலையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் இரவு காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 3ம் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது, மர்மநபர் ஒருவர் காவலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயற்சிக்கும் சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.