ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து தமிழக பக்தர்கள் படகில் புறப்பட்டனர்.உளவு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பின் பக்தர்களை அனுப்பி வைத்தனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி திருச்சிலுவை ஆராதனை, சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடக்கிறது. இலங்கை மற்றும் தமிழகத்தை சேர்ந்த பாதிரியார்கள் இணைந்து திருப்பலி பூஜை நடத்துகின்றனர். இவ்விழாவில் இலங்கையை சேர்ந்த 6 ஆயிரம் பக்தர்களும், தமிழகத்தை சேர்ந்த 3 ஆயிரம் பக்தர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து தமிழக பக்தர்கள் புறப்பட்டனர்
- யாத்ரீகர்களின்
- தமிழ்நாடு
- ராமேஸ்வரம்
- கோயில் திருவிழா
- கச்சதிவ் புனித அந்தோணி
- செயின்ட் அந்தோனி
- கச்சதீவு