ஓசூர்: ஓசூர் ராமநாயக்கன் ஏரி சிறுவர் பூங்காவில் மரங்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள், பொதுமக்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரில் 120 ஏக்கரில் ராமநாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் 4 ஏக்கரில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை ஓசூர் சப் கலெக்டராக இருந்த அசோக்வர்தன் ஷெட்டி திறந்து வைத்தார். இந்த பூங்கா பல ஆண்டுகள் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. இதையடுத்து, தற்போதைய ஓசூர் மாநகராட்சி ஆணையாளரும், இணை இயக்குநருமான பாலசுப்ரமணியன், ராமநாயக்கன் ஏரி மற்றும் சிறுவர் பூங்காவை புதுப்பிக்க ₹29 கோடி நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கி வைத்தார். பணிகள் நடந்து வரும் நிலையில் ஏரி பூங்காவில் உள்ள மரங்களில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது.
ஓசூர் ராமநாயக்கன் ஏரி பூங்கா மரங்களில் ஓவியம்: பொதுமக்கள் வரவேற்பு
- ஓசூர் ராமநாயக்கன் லேக் பார்க் மரங்கள்: பொது வரவேற்பு
- ஓவியம்: பொது வரவேற்பு
- ஓசூர் ராமநாயக்கன் லேக் பார்க் மரங்கள்