மூணாறு: மூணாறில் கட்டுமானப் பணி முடியாத கட்டிடம் போதை ஆசாமிகளின் கூடாரமாக மாறி வருவதால், அப்பகுதியில் நடமாடும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறு அருகே இக்கா நகர் உள்ளது. இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன், கேரள மதுபான விற்பனை நிலையம் தொடங்குவதற்காக தனிநபர் கட்டிடம் கட்டினார். இக்கட்டிடத்தின் பணிகள் நிறைவு பெறாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டிடம் முழுவதும் பாழடைந்து கிடக்கிறது. இதனை சாதகமாக்கி சமூக விரோத செயல்களை அரங்கேற்றி வருகின்றனர்.