புதுடெல்லி: டெல்லி வன்முறையின்போது போலீஸ்காரரின் நெற்றியின் மீது துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஷாரூக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் கடந்த வாரம் நடந்த போராட்டத்தின்போது, வன்முறை வெடித்தது. வீடுகள், கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறையில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
வன்முறை நடந்தபோது, ஜப்ராபாத் பகுதியில் ஒரு நபர் போலீஸ்காரரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார்.