லக்னோ: பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள கணக்குகளை விட்டு வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பின்னர் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், சர்வதேச மகளிர் தினத்தன்று தனது சமூக வலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்க அனுமதிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `அனைத்து சமூக வலைதள கணக்குகளில் இருந்தும் விலகும் திட்டம் இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தது, தலைப்பு செய்தியானது.