சென்னை: மேல்முறையீட்டு மனுக்களில் தீர்வு வரும் வரை வாடகை உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோயில் மனை குடியிருப்போர் சங்கத்தினர் துணை முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். தமிழ்நாடு கோயில் மனை குடியிருப்போர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், பாடி தேவர் நகர் செயலாளர் அன்புரோஸ், பாடி நாராயணமூர்த்தி, நகர் செயலாளர் செல்வகுமார், அரும்பாக்கம் ஜெபராஜ் உள்ளிட்டோர் வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, அவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கோயில் மனைகளில் பல ஆண்டு காலமாக தலைமுறை தலைமுறையாக வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு தாங்கள் ெவளியிட்டுள்ள அரசாணை மூலமாக தடைகளை தகர்த்தெறிந்து பட்டா வழங்கி தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.கோயில் மனையில் குடியிருப்போர் கோயில் நிர்வாகத்தின் அனுமதியுடன் மனைகளில் தங்கள் சொந்த செலவில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
மேல்முறையீட்டு மனுக்களில் தீர்வு வரும் வரை வாடகை உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்: கோயில் மனை குடியிருப்போர் சங்கம் துணை முதல்வரை சந்தித்து மனு
- வாடகை உயர்வு
- கோயில் நில குடியிருப்பாளர்கள் சங்கம்
- கோயில் நில குத்தகைதாரர்கள் சங்கம் தி
- துணை முதலமைச்சர்