ஆட்டோவில் சடலம் மீட்பு

சென்னை: நங்கநல்லூர் அருகே ஆட்டோவில் கிடந்த சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். நங்கநல்லூர் எஸ்பிஐ காலனி ஆட்டோ ஸ்டாண்டில் நின்றிருந்த ஆட்டோ ஒன்றில் ஆண் சடலம் கிடப்பதாக பழவந்தாங்கல் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், நங்கநல்லூர் இந்து காலனி 21வது தெருவை சேர்ந்த பாலாஜி (43) என்பது தெரிந்தது. கேட்டரிங் தொழில் செய்து வந்த இவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென மாயமானதும் தெரியவந்தது. இவர், எப்படி இறந்தார் என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: