மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒரத்தி அருகே உள்ள வடக்கு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி. இவரது மகன் தர்மேஷ்(9). அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் இரு மகன்கள் ராஜா(12), ஆகாஷ்(11). இவர்கள் 3 பேரும் வட மடிப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்துவந்தனர். 3 பேரும் வீட்டில் சொல்லாமல் அங்குள்ள குளத்தில் நேற்று மாலை குளிக்க சென்றுள்ளனர். இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பதறிய பெற்றோர் குளக்கரை பகுதியில் சென்று தேடினர்.