புதுடெல்லி : டெல்லி கலவரத்தில் வீட்டை இழந்த தனது படையை சேர்ந்த வீரருக்கு வீடு கட்டித் தர எல்லைப் பாதுகாப்புப் படை முடிவு செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி அருகே ராதாபாரியில் எல்லை பாதுகாப்பு படை முகாம் உள்ளது. இங்கு, 29 வயதான முகமது அனீஸ் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இவர் டெல்லிக்கு பணி மாறுதல் செய்யப்பட உள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் வட கிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு கும்பல்கள் இடையே வன்முறை வெடித்தது. இதில், வீடுகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 42 பேர் உயிரிழந்தனர். இதில், அனீசின் பெற்றோர் வீடும் சேதமானது. இது பற்றி எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) அதிகாரிகளுக்கு ெதரிய வந்தது.