புதுடெல்லி: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த 500 மெகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தி திட்டத்தை மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு 1,500 ஏக்கரில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 3 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் சூரியமின்சக்தி உற்பத்தி திட்டத்தை மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.