புதுடெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி ஏராளமான மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு மனுவில், வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசிய சோனியா, ராகுல், பிரியங்கா மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடவும், அவர்களின் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளை ஆய்வு செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கும்படியும் கோரப்பட்டுள்ளது.