அதிகாரிகள் அதிரடி 15 வயது சிறுமிக்கு திருமணம் நிறுத்தம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா ஜி.பி.கெலமங்கலம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், சூளகிரி தாலுகா சானமாவு அடுத்த பென்னிக்கல் கிராமத்தை சேர்ந்த எல்லேஸ்(25) என்பவருக்கும், நேற்று காலை பென்னிக்கல் கிராமத்தில் திருமணம் நடக்க இருந்தது. தகவல் அறிந்த சானமாவு கிராம நிர்வாக அலுவலர் மனோஜ்குமார் தலைமையில், வருவாய்த்துறையினர் மற்றும் சூளகிரி போலீசார், நேற்று முன்தினம் மாலை அக்கிராமத்திற்கு சென்று, சிறுமியின் பெற்றோர் மற்றும் மணமகனின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தண்டனை குறித்து எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து இருவரது பெற்றோரும், உரிய வயதை எட்டும்வரை திருமணம் நடத்த மாட்டோம் என எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்தனர். இதையடுத்து, நேற்று நடக்க இருந்த சிறுமியின் திருமணம் நிறுத்தப்பட்டது.

Related Stories: