சென்னை: முதல்வர் பழனிசாமிக்கும் சேர்த்துத்தான் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக போராடுகிறோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். தமிழகத்திலேயே லஞ்சம், ஊழலில் முதன்மையாக இருப்பவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான் எனவும் கூறினார். சிஏஏவை அதிமுக எம்.பி.க்கள் எதிர்த்திருந்தால் நாடுமுழுவதும் போராட்டங்கள் வன்முறைகள் நடந்திருக்காது என ஸ்டாலின் கூறினார். வேலூர் மாவட்டம் சோளிங்கரில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், குடியுரிமை சட்டத் திருத்தத்தால் நாட்டில் உள்ள 60 விழுக்காட்டுக்கு மேலான மக்கள், சந்தேக பட்டியலில் இருக்க வேண்டிய சூழல் வரும்.
முதல்வர் பழனிசாமிக்கும் சேர்த்துத்தான் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக போராடுகிறோம்: மு.க.ஸ்டாலின் பேட்டி
- சண்டை
- Chartuttan
- என்பிஆர்
- எம்.கே.ஸ்டாலின் முதல்வர் பழனிசாமி
- , NRC
- சிஏஏ
- எம்.கே. ஸ்டாலின்
- CAA க்கு எதிரான சார்ட்டூட்டன் சண்டை